மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 23 வகையான நாய்களை வளர்க்க தடை

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மூர்க்கத்தனமான, 23 வகை நாய்களை வளர்க்க தடை விதித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பான உத்தரவை, அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் கடித்து, உயிரிழப்போர் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக வெளிநாட்டு இன நாய்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதால், இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள், நிபுணர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அவர்கள் அளித்த பரிந்துரையைத் தொடர்ந்து வெளிநாட்டு ரகம் உட்பட மிகவும் மூர்க்கதனமாக உள்ள, 23 வகை நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பான உத்தரவை, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு நேற்று அனுப்பியது. அதில் கூறப்படுவதாவது, வளர்ப்பு நாய்கள் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால், மிகவும் மூர்க்கத்தனமாக செயல்படும் 23 வகை நாய்களை வளர்க்க தடை விதிக்கப் பட்டுள்ளது.