மதரசா ஆசிரியர் கைது

கேரளாவில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மதரஸா ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சோலை நாதிர் என்பவர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்தில் கைது செய்யப்பட்டார். குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றொரு வழக்கில், மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயதுடைய மற்றொரு மதரஸா ஆசிரியர் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் ஒரு மாதமாக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த மதரசா ஆசிரியர், மேலும் பல மாணவிகளை துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில், ஆறு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மதரசா ஆசிரியரான மலப்புரம் குருவம்பலத்தைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்பருக்கு 62 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.