புல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி

புல்வாமா தியாகிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், “புல்வாமாவில் இதே நாளில் நாம் இழந்த வீரம் செறிந்த நமது நாயகர்களை நினைவுகூர்கிறேன். அவர்களின் மகத்தான தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்.  அவர்களின் துணிவு, வலுவான மேம்பட்ட பாரதத்தை கட்டமைக்க ஊக்கமளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.