பிரதமர் மோடி முதலிடம்

அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனமான மார்னிங் கன்சல்ட், சர்வதேச அளவில் மிகச் சிறப்பாக செயல்படும் உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்நாடுகளின் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி அந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் முடிவுகளின்படி, பாரதத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 78 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 18 சதவீதம் பேர் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர். 4 சதவீதம் பேர் எந்த கருத்து தெரிவிக்கவில்லை. அடுத்ததாக, மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 68 சதவீத வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.  3வது இடத்தில் சுவிட்சர்லாந்து அதிபர் ஆலைன் பெர்செட் 62 சதவீத வாக்குகளுடன் உள்ளார். ஆஸ்திரேலிய அதிபர் அந்தோணி அல்பேன்ஸ் 58 சதவீத வாக்குகளுடன் 4வது இடத்திலும் பிரேசில் அதிபராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 5வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 40 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அவருக்கு எதிராக 52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதனால், அவர் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.