நீதிகேட்டு போராட்டம்

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்துவந்த, கொரோனா காலத்தில் மிகசிறப்பாக பணியாற்றி பாராட்டும் விருதும் பெற்றவர் செவிலியர் முருகலட்சுமி. இவர் இந்துமுன்னணி கழுகுமலை ஒன்றிய துணைத்தலைவர் சின்னத்தம்பியின் மனைவி. முருகலட்சுமி செவிலியர் தினத்தில் மருத்துவமனையின் கவனக்குறைவால் இறந்துபோனார். செவிலியர் முருகலட்சுமி மரணத்திற்கு நீதி கேட்டும் அவர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி வழங்க கோரியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணியினர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மருத்துவமனை வளாகத்தில் மாநில செயளாலர் கா. குற்றாலநாதன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் தொடர்கிறது.