ஏ.பி.ஜி.பி கோரிக்கை

நுகர்வோர் அமைப்பான அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து அமைப்பின் (ஏ.பி.ஜி.பி) வேளச்சேரி கிளை அமைப்பினர், சாமானிய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகள் அடங்கிய 2வது ஏ.பி.ஜி.பி கோரிக்கை குறிப்புகளை இந்திய ரிசர்வ் வங்கியின் ஒம்புட்ஸ்மேன், தலைமைப் பொது மேலாளர் டாக்டர் பாலா கெஞ்சப்பாவைச் சந்தித்து அளித்தனர். வங்கிகள் தங்கள் கடன் பற்றுக்கான டெபிட் அறிவிப்புகளை எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு முறையாக அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் வைக்கப்பட்டது. பாலா கெஞ்சப்பா அதனை மாதாந்திர குழுவில் சர்ப்பித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.