உலக நாடுகள் பாராட்டும் பாரதம்

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரத பேரிடர் மீட்புப்படையினரின் மீட்புப் பணிகள், உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ளது. ஒரு காலத்தில் உலக நாடுகளின் உதவியை பாரதம் நாடியிருந்த நிலை மாறி, தற்போது உலக நாடுகளுக்கு பாரதத்தின் ஒத்துழைப்பை நீட்டிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது தற்போது பாரதம் அதிகாரம் மிக்கதாகத் திகழ்வதை பிரதிபலிக்கிறது. ‘இது,போருக்கான தருணம் அல்ல’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது நாம் உலக நாடுகளின் உதவியை நாடும் நிலையில் இல்லை, மாறாக முதலீட்டுக்கான வாய்ப்புகள் பாரதத்தில் குவிந்திருப்பதாக உலக நாடுகள் கருதுகின்றன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், உலக நாடுகளுக்கு உதவுவதற்கு மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிரியா, லிபியா, நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலநடுக்க பாதிப்பின் போது பாரதம் ஆதரவுக்கரம் நீட்டி உதவியது. இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உலக நாடுகளை உள்ளடக்கிய ‘வசுதைவக் குடும்பகம்’ என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது” என தெரிவித்தார்.