இந்து முன்னணி செயற்குழு

கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று துவங்கியது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தமிழகம் முழுவதும் இருந்து மாநில, கோட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் ‘ஹிந்துக்களின் அடையாளங்களை திருடும் கிறிஸ்தவ மிஷநரிகள்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட உள்ளன என தெரிகிறது.