அண்ணாமலை வாழ்த்து

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இருவேறு சமூக ஊடகப்பதிவுகளில், எவரெஸ்ட் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப் பெண்ணையும் ‘நமோ’ செயலியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிறப்பாகச் செயல்பட்டவர்களையும் வாழ்த்தியுள்ளார்.

முத்தமிழ் செல்வியின் எவரெஸ்ட் சாதனை: சென்னையைச் சேர்ந்த சகோதரி என். முத்தமிழ் செல்வி, எவரெஸ்ட் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ‘ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பித்த சகோதரிக்கு, தமிழக பா.ஜ.க சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமோ செயலி கேள்வி பதில்: மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியை முன்னிட்டு, ‘நமோ’ செயலியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில், தமிழக பா’ஜ’கவின் நிர்வாகிகளான கே.ஆர். பில்லப்பன், சாய் பூர்ணிமா, வினோத் குமார், என்.சுகுமார் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு, முதல் இருபது இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பிரதமரின் நமோ செயலியில் இடம்பெற்றுள்ள கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.