அனுதின வாழ்வில் யோகா

மக்களின் அனுதின வாழ்வில் யோகா இடம் பெற வேண்டும் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறியுள்ளார். சர்வதேச யோகா தினம் அடுத்த மாதம் 21ம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி சிக்கிம் தலைநகர் காங்டாக் புத்த மடத்தில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பேசிய மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், மக்கள் தங்களது வாழ்க்கை முறையில் ஒரு பகுதியாக யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உலக அரங்கில் பாரதத்தின் புகழ் பரவ யோகா சிறந்த பங்காற்றியுள்ளது’ என குறிப்பிட்டார்.