உதயநிதி வெற்றி செல்லுமா?

தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக சர்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்தொகுதியின் தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர், உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளார். அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். தொகுதியின் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, ஓரிரு வாரங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.