காதிக்கு வரவேற்பு

காதி கைத்தறி பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு நாடெங்கிலும் உள்ள பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது தெரியவந்துள்ளது. கடந்த அக்டோபர் 2 அன்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காதி விற்பனையகங்களில் பொதுமக்கள் அதிகமாக காதி பொருட்களை வாங்கினர். டெல்லியின் கன்னாட் பிளேஸில் உள்ள காதி விற்பனை நிலையத்தில் மட்டும் மொத்த விற்பனை ரூ. 1.02 கோடிக்கு மேல் பதிவானது. கடந்த 4 வருடங்களாக இங்கு காந்தி ஜெயந்தி அன்று விற்பனை ஒரு கோடியை தாண்டி பதிவாகி வருகிறது.