வி.எஸ்.கே விழா

விஸ்வ சம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா, நாகர்கோவிலில் வரும் 01.11.2021 திங்கட்கிழமை அன்று விவேக் ரத்த தான அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தலைமை விருந்தினராக ஆல் இந்தியா ரேடியோவை சேர்ந்த டி. ராஜேந்திரன், சிறப்பு அழைப்பாளராக அறிஞர் அண்ணா கல்லூரியை முதல்வர் எஸ். சுப்ரமணிய பிள்ளை, சிறப்பு பேச்சாளராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தமிழக கேரள சேவா பிரமுக் பத்மகுமார் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில், கவிஞர் சுதே கண்ணா, பாலிமர் தொலைக்காட்சி நிருபர் அருள் குமார், எழுத்தாளர் ஜெயாபோஸ், எழுத்தாளர் சுவாமிநாதன், யூ டியூபர் ஹிரேஷ் ஆகியோருக்கு ஸ்ரீ நாரதர் விருது வழங்கப்படுகிறது. மேலும், விஜயபாரதம் வார இதழின் தீபாவளி மலர் வெளியீடும் நடைபெறுகிறது.