மனதின் குரல் இதழ்

மனதின் குரல் கடந்த அத்தியாயத்தின் அடிப்படையிலான இதழை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் தனது டுவிட்டர் பதிவில், ‘’பாரதத்தின் ஏற்றுமதி அதிகரிப்பு, ஆயுர்வேத ஸ்டார்ட் அப்கள், தண்ணீர் சேமிப்பு, பாரம்பரிய கண்காட்சிகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் நாம் விவாதித்த கடந்த மாத மனதின் குரல் அடிப்படையிலான சுவையான இதழை இங்கு காணலாம். வரும் 24ம் தேதி அடுத்த அத்தியாயத்தில் இணைவோம்” என கூறியுள்ளார். பிரதமர் வெளியிட்ட அந்த இதழை http://davp.nic.in/ebook/mib/MannKiBaat_Hindi/index.html என்ற இணைப்பில் படிக்கலாம்.