அத்துமீறலை கண்டுகொள்ளாத நிர்வாகம்

மகாராஷ்டிரா, நவி மும்பையில் வங்கால தேசத்தவர்கள் சட்டவிரோதமாக பல ஒதுக்குப்புறமான பகுதிகளில் குடியேறியுள்ளனர். கேசர் சொலிடர், சிவர்ஷன் அபார்ட்மென்ட், ஜெய்புரியார் பள்ளி, எம்.எஸ்.இ.டி.எல் சோன்கர் துணை மின்நிலையம் போன்ற பல பகுதிகளில் இவர்களது சட்ட விரோத குடியேற்றம் உள்ளதை புகைப்பட ஆதாரத்துடன் நூற்றுக்கணக்கான புகார்கள் பொதுமக்களால் நவி மும்பை நிர்வாகத்திடம் (என்.எம்.எம்.சி) தரப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உண்மையில் நவி மும்பை மாநகராட்சியில் புகார் அளித்த சில மாதங்களுக்குப் பிறகு, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர்களின் பயம் போய்விட்டது, தற்போது, பங்களாதேஷ் குடியேறிகளின் அத்துமீறல்கள் மேலும் அதிகரித்துள்ளன என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.