கிறிஸ்தவ காப்பகத்தில் அத்துமீறல்

சென்னையில் ‘மெட்ராஸ் கிறிஸ்டியன் கௌன்சில் ஆப் சோஷியல் சர்வீஸ்’ என்ற அமைப்பு காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறது. அந்த காப்பகத்தில் சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என 130 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த காப்பகத்தின் நிர்வாக செயலாளர் இசபெல் ரிச்சர்ட்சன். இவர் சென்னை மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினராகவும் உள்ளார். கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் இசபெல் தனது தம்பி பென்னட் ரிச்சர்ட்சன் என்பவரை அந்த விடுதியில் தங்கவைத்துள்ளார். காப்பகத்தில் தங்கிய ரிச்சர்ட்சன், அங்கிருந்த 15 வயது சிறுமி மற்றும் 20 வயது பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அந்த சிறுமி காப்பக பொறுப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். விசாரணையில் பென்னட் பாலியல் தொல்லை தந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இசபெல் நிர்வாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இசபெல்லை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான பென்னட்டை தேடி வருகின்றனர்.