விக்ராந்த் அர்ப்பணிப்பு

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடந்த விழாவில், ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “இந்திய கடற்படைக்கென்று பெருமை மிகுந்த வரலாறு உள்ளது. ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல் ஒவ்வொரு தேசத்தவரின் பெருமை. பாரத மக்களின் திறமை, மன உறுதிக்கு சான்றாக இக்கப்பல் உள்ளது. பாரதம் எதிர்கொள்ளும் சவால்களின் பதில் அளிக்கும் விதத்தில் இந்த கப்பல் உருவெடுத்துள்ளது. தற்சார்பு பாரதத்தின் பெருமைமிகு அடையாளமாக கம்பீரமாக காட்சி அளிக்கிறது விக்ராந்த். விமானம் தாங்கி கப்பலை சொந்தமாக தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் நமது நாடும் சேர்ந்துள்ளது. வடிவமைப்பிலும், திறனிலும் இந்த போர்க்கப்பல் ஒரு மிதக்கும் நகரம். இந்த கப்பலின் 76 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை. இந்திய கடற்படையில் மிச்சமிருந்த காலனி ஆட்சியின் குறியீட்டை இன்று நாம் அகற்றியுள்ளோம்” என்று கூறினார்.