74 ஆண்டு போராட்டத்திற்கு வெற்றி

கர்நாடக மாநிலம் கோலார் நகரின் நடுவில் இருந்த மணிகூண்டில் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுத்து வந்த அமைதி மார்க்கத்தினரின் அடாவடித்தனம் தற்போது முடிவுற்கு வந்துள்ளது. பல வருட தொடர் போராட்டத்திற்குப் பிறகு மாவட்ட நிர்வாகம் அந்த மணிகூண்டில் தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளது. இதற்காக கடும் முயற்சிகளை எடுத்தவர் கோலார் பா.ஜ.க. எம்.பி. எஸ். முனிஸ்வாமி. சுதந்திர பாரதத்தில் ஒரு பொது இடத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கே இன்னும் நாம் போராட வேண்டிய நிலையில்தான் இருந்து வருகிறோம் என்பது வேதனைக்குரியது.