உ.பி காங்கிரஸ் பரிதாபம்

விரைவில் தேர்தல் நடைபெற உள்ள உத்தரபிரதேசத்தில் பெண்களின் வாக்குகளை பெறுவதற்காக ஜான்சியில் காங்கிரஸ் கட்சி, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. இதில் கலந்துகொண்ட மாணவிகள், மாரத்தான் ஓட்டப்பந்தயம் துவங்கும் பொழுது “மோடி மோடி . . ” என்று முழக்கம் போட்டனர். இதனை பார்த்த காங்கிரஸ் கட்சியினர் வெறுத்து போயினர். பெண் குழந்தைகளைக்கூட கவரமுடியாத பிரியங்காவினால் உத்தர பிரதேசத்தில் எப்படி ஆட்சியை பிடிக்க முடியும் என அவர்கள் புலம்பி வருகின்றனர். இதில் உச்சபட்ச காமெடி என்னவென்றால், யோகி ஆதித்தியநாத் தலைமையிலான அம்மாநில அரசு இந்த மாரத்தானுக்கு அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி ஜான்சி ராணிகள் வலம் வருவார்கள் என்றார் பிரியங்கா. ஆனால் வலம் வந்த ஜான்சி ராணிகள் “மோடி மோடி . . .” என்று முழங்கி காங்கிரஸ் இளவரசியின் முகத்தில் கரியை பூசி விட்டார்கள்.