உக்ரைன் அதிபர் உருக்கம்

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதனை சமாளிக்க முடியாமல் உக்ரைன் திணறுகிறது. உதவ நேட்டோ நாடுகள் உட்பட பல நாடுகளிடம் கோரி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி, ‘எங்கள் தேசத்தைக் காக்க நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுடன் துணை நின்று போராட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவும் அவர்கள் முன்வரவில்லை. அனைவருக்கும் பயம். ரஷ்ய படைகளின் இலக்கான நானும் எனது குடும்பத்தினரும் இன்னும் தலைநகரில்தான் தான் இருக்கிறோம். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்க கேட்டுக்கொள்கிறோம். உக்ரைனை அரசியல் ரீதியாக செயலிழக்கச் செய்வதே ரஷ்யாவின் இலக்கு’ என்று கூறியுள்ளார்.