வெடிகுண்டு வழக்கில் இருவர் கைது

மேற்கு வங்க பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பவன் குமார் சிங் வீட்டில் வெடிகுண்டுகளை வீசிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகுல் பாசி, பாதல் குமார் என்ற இருவரை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ கைது செய்தது. மேலும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு வைத்திருந்ததாக முகமது தௌஹிர் மஹ்மூத், ஜுஹாப் ஹமீத் இர்பான் நசீர், முகமது ஷிஹாப் உள்ளிட்டோர் மீதான வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ, பெங்களூருவில் முஹம்மது தௌகிர் மஹ்மூத் என்பவரையும் கைது செய்துள்ளது.