நடிகை மீது தேசத் துரோக வழக்கு

‘லட்சத்தீவில் வசிக்கும் மக்களுக்கு எதிராக மத்திய அரசு உயிரியல் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறது’ என நடிகை ஆயிஷா சுல்தானா மீடியா ஒன் என்ற மலையாள செய்தி சேனலில் தேச விரோத கருத்துக்களை தெரிவித்தார். அந்தகலந்துரையாடலில் கலந்துகொண்ட பா.ஜ.க பிரதிநிதி, ஆயிஷா தனது கருத்தை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினார். ஆனால் நடிகை மறுத்துவிட்டார்.  இதனால், அவரது சர்ச்சைக்குரிய கருத்து குறித்து பா.ஜ.க பாலக்காடு, பதனம்திட்டா மற்றும் திருவனந்தபுரம் காவல் நிலையங்களில் புகார்களை அளித்தது. இதனையடுத்து, அவர் மீது, பிரிவு 124 ஏ, 153 பி இன் கீழ் தேசத்துரோக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மத்திய அரசு துறைகளும் அவரது பேச்சு குறித்து ஆராய்ந்து வருகின்றன. ஆயிஷா விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.