வாஞ்சிநாதன் தியாக ஜோதி தொடரோட்டம்

வாஞ்சிநாதன் தியாக ஜோதி தொடர் ஓட்டம் நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று அனுமதி கொடுத்துள்ளது. முன்னதாக தேசிய சிந்தனை பேரவை சார்பில்  செங்கோட்டையிலிருந்து வாஞ்சிமணியாச்சி வரை நிகழ்த்தப்படவிருந்த இந்த தியாகி வாஞ்சிநாதன் தொடர் ஓட்டத்திற்கு மூன்று மாவட்ட காவல்துறையும் அனுமதி மறுத்திருந்தது நினைவு கூரத்தக்கது. இதனையடுத்து இன்று 17.6.22 காலை 6:30 க்கு திருநெல்வேலி ஜங்ஷன் பாரதியார் சிலை முன்பிருந்து தியாக ஜோதி ஓட்டம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.