முஸ்லிம் பெண்களுக்கு மிரட்டல்

முஸ்லிம் பெண்கள், தங்களது சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுடன் மட்டுமே பேச வேண்டும், பழக வேண்டும். ஹிந்து இளைஞர்களுடன் பேசவோ, பழகவோ கூடாது என்று அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் வெளிப்படையாகவே சமீப காலமாக மிரட்டுகின்றனர். சமீபத்தில் குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் வேலூர் கோட்டையை சுற்றிப் பார்ப்பதற்காக ஹிந்து நண்பருடன் முஸ்லிம் பெண் ஒருவர் வந்திருந்தார். இதைக் கண்ட சில முஸ்லிம் இளைஞர்கள், ‘நீ எப்படி ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து கொண்டு ஹிந்து ஆணுடன் வரலாம்’ என்று கேட்டு மிரட்டினார்கள். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, மிரட்டல் விடுத்த அந்த முஸ்லிம் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.