எம்.எல்.ஏவுக்கு மிரட்டல் கடிதம்

கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ கே.எஸ் ஈஸ்வரப்பா, 18ம் நூற்றாண்டின் மைசூரு ஆட்சியாளர் திப்பு சுல்தானை ‘முஸ்லிம் குண்டா’ என்று கூறியதால், அவருக்கு ‘நாக்கு வெட்டப்படும்’ என்று மிரட்டல் கடிதம் வந்தது. இதையடுத்து அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “சில கோழைகள் நான் திப்பு சுல்தானை முஸ்லீம் குண்டா என்று அழைத்ததால், என் நாக்கை அறுபதாக என்று மிரட்டி ஒரு அநாமதேய மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். இதுபோன்ற மிரட்டல் கடிதங்களுக்கு தான் பயப்படவில்லை. அநாமதேய கடிதம் அனுப்புபவர்கள் கோழைகள். இதற்கெல்லாம் நான் ஒருபோதும் பயந்ததில்லை, பயப்படவும் மாட்டேன். ஆனால், சட்டசபை உறுப்பினர் என்ற முறையில், சட்ட அமலாக்க அதிகாரிகளை அணுகி, இந்த கடிதத்தை எழுதிய கோழையை கண்டுபிடிக்கும்படி புகார் கொடுத்துள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.