இது முன்னோடி அரசியல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம் அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில், அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்குள்ள இலங்கை தமிழர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து தமிழ் தலைவர்களை ஒற்றுமை படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இலங்கை சிறையில் உள்ள நமது நாட்டு மீனவர்களை சந்தித்து அவர்களை விரைவில் வெளியுறவுத்துறை மூலம் வெளியில் கொண்டுவருவோம் என ஆறுதல் தெரிவித்தார், தமிழகத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதி இலங்கை சிறையில் சென்று தமிழக மீனவர்களை சந்தித்து பேசுவது இதுவே முதல்முறை.