இவர்கள்தான் கம்யூனிஸ்ட்டுகள்

தமிழகத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.எம்), ‘தனது குடிமக்களுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ள மக்கள் சீனம்’ என தனது டுவிட்டர் பதிவில் படம் பதிவிட்டு கொண்டாடியுள்ளது. இதன் மூலம் கொரோனோ வைரசை பரப்பிய சீனா’விற்கு ஆதரவான தனது விசுவாசத்தை காண்பித்துள்ளது கம்யூனிச கட்சி. சீனா பரப்பிய வைரசிற்கு பாரதம் தடுப்பூசியை கண்டுபிடித்ததோடு அதனை 60 கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தியுள்ளது. இது தவிர ஐ.நா பாதுகாப்புப் படையினர், அண்டை நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகளுக்கும் தடுப்பூசியை அளித்து உதவி செய்துவருகிறது. இதைத்தவிர உலக நாடுகளுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் என வாரிவழங்கி உதவியுள்ளது. இதனை எல்லாம் பாராட்டத் தெரியாத கம்யூனிஸ்ட்டுகள் பாரத மண்ணிலேயே வாழ்ந்துக்கொண்டு அதன் உணவையே சாப்பிட்டுவிட்டு தனது விஸ்வாசத்தை சீனாவுக்கு காட்டுகின்றனர். இதந்த புத்தி இவர்களிடம் இன்று நேற்றல்ல, பல காலமாக உள்ளது. பாரத சீன போரின்போது, ராணுவ வீரர்களுக்கு ரத்ததானம் செய்ய மறுப்பு, பாரதப் பொருளாதாரம், ராணுவ தளவாட உற்பத்தியை தடுப்பது போன்ற காரனங்களுக்காக வேண்டும் என்றே அக்காலத்தில் போரட்டங்கள் நடத்தியவர்கள்தான் கம்யூனிஸ்ட்டுகள் என்பது நினைவுகூரத்தக்கது.