வேதபுரி சிலை திருட்டு

தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற வேதபுரி ஸ்ரீ சுவாமி சித்பவானந்த ஆசிரமத்தின்கீழ் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் 2.9 லட்சரூபாய் மதிப்புள்ள தாயுமானவர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட சிலைகள் திருடுபோனது. இதனை கண்டுபிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்துமுன்னணி இயக்கத்தின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் அங்கு சென்று பார்வையிட்டனர். காவல்துறை உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து சிலைகளை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.