உண்மையை மறைக்க முடியாது

டெல்லியில் நடைபெற்ற தேவரிஷி நாரதர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில் பாரதிய பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர், “ஞானவாபி விவகாரம் நடந்து கொண்டிருக்கிறது. உண்மைகள் வெளிவந்து கொண்டுள்ளன. அவற்றை வெளியே வர விட வேண்டும் என்று நான் நம்புகிறேன். எதுவாக இருந்தாலும் உண்மை எப்போதும் அதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்கும். எவ்வளவு காலம் நீங்கள் அதை மூடி மறைக்க முடியும்? வரலாற்று உண்மைகளை சமூகத்தின் முன் சரியான கண்ணோட்டத்தில் வைக்கப்பட வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.