நீதிபதியை மிரட்டிய பயங்கரவாதிகள்

வேலூரை சேர்ந்த வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், டாக்டர் அரவிந்த் ரெட்டி என ஹிந்து அமைப்பு மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கொடூரமாக கொல்லப் பட்டனர். ‘மதுரையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன் என்ற பயங்கரவாதி தலைமையில் ‘ஜிஹாத் புனிதப் படை’ இதனை செயல்படுத்தியது. இதில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட பயங்கரவாதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த மூவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள், நீதிபதியை மிரட்டும் விதமாக பேசியுள்ளனர். பக்ருதீன் ‘எந்த போலீஸ்காரரும் எங்களை தொடக்கூடாது. நான் நீதிபதியிடம் பேச வேண்டும்’ என மிரட்டினான். ‘இந்த வழக்கை நடத்த மாட்டோம். நீங்கள் எங்களை துாக்கில் போடுவீர்கள், இல்லையென்றால் சுட்டு கொலை செய்வீர்கள். உங்களால் வேறு என்ன செய்ய முடியும்’ என நீதிபதியை மிரட்டினான். சத்தமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டான். பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரும் ‘இழப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை; இப்போதே சாகத் தயார். உங்களால் முடிந்ததை பாருங்கள்’ என பேசினர். அவர்களது நடவடிக்கையை ‘வீடியோ’ பதிவு செய்த காவலரையும் அந்த பயங்கரவாதிகள் தரக்குறைவாக பேசி மிரட்டினர். இதனையடுத்து மூவரும் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.