ஸ்டாலின் தலைமையில் கோயில் குழு

தமிழகத்தில் கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்தவும் பக்தர்களின் வசதியை மேம்படுத்வும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 17 பேர் கொண்ட  இந்த உயர்நிலை ஆலோசனைக் குழுவின் தலைவராக ஸ்டாலினும் துணை தலைவராக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் உள்ளனர். இவர்களுடன் ஹிந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் ஆகியோர் பதவி வழி அலுவல் சார் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம், சத்தியவேல் முருகனார், தேச மங்கையர்க்கரசி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும் ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஓய்வுபெற்ற நீதிபதி டி. மதிவாணன், முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், கருமுத்து கண்ணன், மல்லிகார்ஜூன் சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் இதில் இணைகின்றனர் என கூறப்பட்டு உள்ளது.