மத்திய அரசின் நோக்கம்

அடுத்த பத்தாண்டுகளில் உலகில் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக பாரதத்தை மாற்றும் நோக்கில், மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா யுக்ரைன் போர் நிகழாமல் இருந்திருந்தால், பாரதம் மூன்று புள்ளி இரண்டு ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தாண்டியிருக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மத்தியில் அமைந்த பின்னர், உலக நாடுகள் மத்தியில் பாரதத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தார்.