முதல்வரை விமர்சித்த நக்சலைட்கள்

கேரளாவில் திருவனந்தபுரம் காசர்கோடு இடையிலான 530 கி.மீ துாரத்திற்கு ‘சில்வர் லைன்’ என பெயரிடப்பட்ட அதிவேக ரயில் சேவையை துவங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு எதிராக பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கட்சிகள் போராடி வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக விமர்சித்து மாநில அரசுக்கு எதிரான நக்சலைட்களே போஸ்டர்களை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் அவர்கள் மாநில அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்த மக்களை துாண்டியுள்ளனர். இது குறித்து கேரள காவல்துறை விசாரித்து வருகிறது.