உண்மையை திரித்த ஊடகங்கள்

ஒருசில நாட்களுக்கு முன்பு உக்ரைனில் இருந்து பாதுகப்பாக வெளியேற்றப்பட்ட பாரதத்தை சேர்ந்த மாணவி சதாக்ஷி சச்சன் என்பவர், ‘உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை அழைத்து வர சரியான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என கூறி மத்திய அரசைக் கண்டித்து அழும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இதனை பல பத்திரிகை, ஊடகங்களும் வெளியிட்டன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் இதனை தங்கள் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக்கொண்டன. இந்நிலையில், மாணவி சதாக்ஷி சச்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் கடுமையான மன உளைச்சலில் இருந்தபோது கூறிய வார்த்தைகளையும் கருத்துகளையும் திரித்து வெளியிட்டதற்காக ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார். தன்னை பத்திரமாக வெளியேற்றியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.