தமிழக அரசின் பொய்

தமிழக அரசு, உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்கும் செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என கூறியிருந்தது. இதற்காக எம்.பி, எம்.எல்.ஏக்களை அனுப்புவதாக சொன்னது, சென்னை ஏர்போர்ட்டில் சென்று மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது என பல நாடகங்கள் நடத்தப்பட்டது என்பது தனி கதை. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வெளியுறவுத் துறையிடம் மாணவர்களை அழைத்து வரும் செலவை யார் ஏற்றது, மாநிலங்கள் என்றால் அதன் விவரம் தரவும் என கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை அளித்த பதிலில், மாணவர்களை அழைத்து வரும் செலவு அனைத்தும் மத்திய அரசே ஏற்ற விவரம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் பொய் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.