முஸ்லிம் கும்பலின் வெறிச்செயல்

பீகார் காவல்துறையில் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசர் (ஏஸ்.எச்.ஓ) என்ற பொறுப்பில் இருக்கும் அஷ்வானி குமார், கடந்த சனிக்கிழமை அன்று காலை மேற்கு வங்கத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டபாரா கிராமத்தில் ஒரு இருசக்கர வாகன திருடனை பிடிக்க சென்றிருந்தார். அப்போது, வாகன திருட்டு கும்பலின் தலைவன் முகமது இஸ்ரேல், அவனது மகன் முகமது அப்துல்  தலைமையிலான ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டார். அவரை கொல்ல அவர்கள் அருகில் உள்ள மசூதியின் ஸ்பீக்கரை பயன்படுத்தி மற்ற முஸ்லிம்களையும் துணைக்கு அழைத்து கொன்றுள்ளனர். அஷ்வானி குமார் இறந்த செய்தியை கேட்ட அவரது தாய் உர்மிளா தேவி அதிர்ச்சியில் இறந்துவிட்டார். முஸ்லிம் மதவெறி கும்பலால் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டதை குறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு, தன் அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்துள்ளது. வி.எச்.பியின் செய்தி குறிப்பில், பாண்டபரா பகுதி ஜிஹாதிகளின் குகை,  அவர்களுக்கு மமதா பேனர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு ஆதரவளித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.