தாக்கப்பட்ட ராணுவ வீரரின் வீடு

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்கள் மீதான திருணமுல் கட்சியினர், முஸ்லிம்கள் நடத்திவரும் வன்முறைகளில் ராணுவ வீரர்களின் வீடுகளும் தப்பவில்லை. ஜல்பைகுரி மாவட்டம் ராணிபர்ஹாட்டில் வசிக்கும் எல்லை பாதுகாப்புப்படை வீரரான கமல் சென்னின் வீட்டையும் அவருக்கு சொந்தமான டிராக்டர், உள்ளிட்ட வாகனங்களை தாக்கி தீக்கிரையாக்கி கொள்ளையடித்துள்ளனர். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் மூர்கத்தனமாக தாக்கியுள்ளனர் திருணமூல் கட்சி குண்டர்கள். காயமடைந்த கமல் சென் தற்போது சிலிகுரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, மேற்கு வங்கம், புர்பஸ்தாலி வடக்குப் பகுதியின் பா.ஜ.க வேட்பாளர் டாக்டர் கோபார்தன் தாஸின் வீட்டில் திருணமூல் கட்சியினர் வெடிகுண்டுகளை வீசியதையடுத்து அங்கு நிலைமையை கட்டுப்படுத்த ஒரு சிஆர்பிஎஃப் பிரிவு அனுப்பப்பட்டது.