ஆளுநரை கட்டுப்படுத்த முடியாது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கேரள அரசு, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. அவ்வகையில், கேரளாவில், அமைச்சர்களிடம் தனிப்பட்ட முறையில் பணியாற்றும் பல ஊழியர்களுக்கும் குறிப்பாக அதில் வெறும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே பணியாற்றியவர்களுக்கும அம்மாநில அரசு ஓய்வூதியம் வழங்கி வருவது தெரியவந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், ‘மக்களின் பணத்தை கேரள அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. இது நியாயமல்ல. இதனை மாநில அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில், நான் இதில் தலையிட்டு தகுந்த முடிவு எடுக்க வேண்டியிருக்கும். மாநில அரசை நல்லபடியாக நடத்துவதற்கு மட்டும் நான் இங்கு வரவில்லை. அரசியலமைப்பிற்கு உட்பட்டு மாநில அரசின் செயல்பாடுகள் இருப்பதை உறுதிப்படுத்தவும்தான் நான் இங்கு ஆளுநராக உள்ளேன். மாநில அரசில் உள்ள யாருக்கும், ஆளுநரை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது’ என்று எச்சரிக்கை விடுத்தார்.