பொம்மையல்ல ஹிந்துக்களின் உணர்வு

கொரோனாவை காரணம் காட்டி விநாயகர்‌ சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில்‌ சிலை வைக்கத் தடை, விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்குத் தடை, நீர்நிலைகளில்‌ சிலைகளைக்‌ கரைக்கத் தடை என ஹிந்து விரோத மனப்பான்மையுடன் தி.மு.க அரசு செயல்படுகிறது. இதற்கு ஹிந்து முன்னணி, பா.ஜ.க உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க பிரமுகர் காயத்ரி ரகுராம் இது தொடர்பாக வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “விநாயகர் சதுர்த்தி உதயநிதிக்கு வேண்டுமென்றால் வெறும் ஒரு மண் பொம்மையாக இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு ஹிந்துகளும் நம்பும் கலாச்சாரம், பண்பாடு, உணர்வு, ஒற்றுமையுடன் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நாங்கள் கொண்டாடுகிறோம். தி.மு.க கோடிக்கணக்கான தமிழக மக்களை காயப்படுத்த தீய கொள்கையை திணிக்கிறது,” எனக் கூறியதுடன், #DMKFails என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்.