மாணவர்கள் பாராட்டிய மத்திய அரசு

உக்ரைனில் சிக்கித் தவித்த மாணவர்களை நமது மத்திய அரசு அரும்பாடுபட்டு பத்திரமாக மீட்டு வருகிறது. உலக நாடுகளே இதனை பார்த்து பொறாமைப் படுகின்றன. ஆனால், வழக்கம்போல இதில் தனது ஸ்டிக்கரை ஒட்ட முயன்று வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவ்வகையில், தமிழகம் திரும்பிய மாணவர்களை ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்பொழுது பேசிய மாணவர்கள், மத்திய அரசு எங்களுக்கு சிறப்பான முறையில் உதவி செய்தது. நன்றாக கவனித்துக்கொண்டனர். நமது நாட்டின் அரசை போல வேறு எந்த நாடும் மீட்புப் பணிகளை செய்யவில்லை என மாணவர்கள் பரவசம் அடைந்து பேசினர். இதனால் ஸ்டிக்கர் ஒட்ட முடியாமல் ஸ்டாலின் சங்கடத்தில் நெளிந்தார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.