நீதிமன்றம் சென்றது வாட்ஸ்ஆப்

டுவிட்டர், முகநூல், வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது பயனாளர்களின் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தலைமை நடவடிக்கை அதிகாரி, சிறப்பு பணி தொடர்பு அதிகாரி, உள்ளுறை குறைதீர் அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும் என்பது போன்ற பல புதிய விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் வெளியிட்டது. இந்த விதிகளுக்கு இணங்கிச் செயல்படவும், இதனை செயல்படுத்த கட்டமைப்புகலை உருவாக்கவும் சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டது.விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எதிராக தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அந்த அவகாசம் மே 25 உடன் நிறைவடைந்தது.டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், மத்திய அரசின் புதிய சட்ட விதிகளுக்கு எதிராக, ‘புதிய விதிகள் தனியுரிமை தகவல் பாதுகாப்பை நீர்க்கச் செய்யும், இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது’ என்ற கோணத்தில் வாட்ஸ்ஆப் நிர்வாகம் டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.