பெயர் பலகையில் வில்லங்கம்

நாகர்கோயிலில் உள்ள ஹிந்து அறநிலையத்துறையின் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களுக்கான கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பெயர் பலகையில் ஹிந்து அறநிலையத்துறை என்பதற்கு பதிலாக அறநிலையத்துறை என்று மட்டும் அச்சிடப்பட்டு இருந்தது. இது சமுக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையானது. அப்பகுதி இந்து முன்னணியினர் இதனைக் கண்டித்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து உடனடியாக பெயர்பலகை ஹிந்து அறநிலையத்துறை திருக்கோயில் அலுவலகம் என புதிதாக மாற்றப்பட்டது.