நடிகையின் திமிர்

மத்திய பிரதேசம் நர்மதா நதிக்கரையில் மணிரத்னத்தின் இயக்கத்தில்  ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, 1767ல் ராணி அகல்யா பாயால் நிறுவப்பட்ட சிவலிங்கத்தின் அருகே நடிகை திரிஷா செருப்பு அணிந்து நடந்து சென்றார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. ஹிந்துக்கள் வணங்கும் சிவபெருமானை திரிஷா அவமதித்ததை அறிந்த பல ஹிந்து அமைப்புகள் அவரின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால் நடிகை த்ரிஷாவையும், இயக்குநர் மணிரத்னத்தையும் கைது செய்ய வேண்டும் என ஹிந்து மண்டல் அமைப்பு ஹரிஷ்கேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இதுவரை திரிஷாவோ மணிரத்தினமோ இதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.