பயங்கரவாத பத்திரிக்கையாளர் கைது

ஸ்ரீநகர் லால்சௌக் அருகில் தன் அலுவலகத்தின் வாயிலின் அருகில் கையில் 2 கையெறி குண்டுகளுடன் நின்று கொண்டிருந்த சி.என்.என் – நியூஸ் ஏஜென்சியின் துணை ஆசிரியர் ஆதில் பாரூக்  என்பவரை சி.ஆர்.பி.எப். காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். புல்வாமா உள்ளிட்ட தாக்குதல்களில் இவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. முன்னதாக இவர், 2019ல் பொது பாதுகாப்பு சட்டன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகியுள்ளார். வழக்கம்போல, இவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அர்பன் நக்ஸல்கள் குரல் கொடுத்துள்ளனர். ஸ்ரீநகரின் லால் சௌக் அருகே உள்ள ஹரி சிங் ஹை ஸ்ட்ரீட்டில் நடந்த ஒரு கையெறிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் நடந்த சில மணிநேரத்தில் வெடிகுண்டுகளுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.