பயங்கரவாதிகள் வெறிச்செயல்

கேரள பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் சி. கிருஷ்ணகுமாரின் வீட்டின் அருகே, நாய் ஒன்று பயங்கர ஆயுதத்தால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி 15வது வார்டு தொரப்பாளையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயங்கரவாதிகள் கொலை செய்ய திட்டமிட்டுள்ள ஹிட்லிட்டில் கிருஷ்ணகுமாரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும், அங்கு, பா.ஜ.க பஞ்சாயத்து உறுப்பினர்களை முஸ்லிம் மதத்திற்கு மாறுமாறு மிரட்டும் மொட்டை கடிதங்கள் சமீபகாலமாக வருகின்றன. இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது. கேரளாவில் கடந்த காலங்களில் பயங்கரவாத அமைப்புகள், நாய்களை கொன்று பயிற்சி பெற்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்பதால், இந்த சம்பவத்தை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.