டெல்லியில் பயங்கரவாதி கைது

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு நேற்று டெல்லியின் லக்ஷ்மி நகர் பகுதியில் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியை சேர்ந்த முகமது அஷ்ரப் என்ற பயங்கரவாதியை கைது செய்தது. அவனிடம் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கியும் அதற்கான 60 குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. மேலும், ஒரு கையெறி குண்டு, இரண்டு கைத்துப்பாக்கிகள் அவற்றுக்கான 50 துப்பாக்கி குண்டுகளும் மீட்கப்பட்டன. அவன், போலி ஆவணங்கள் மூலம் போலி இந்திய அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளான். டெல்லியில் நவராத்திரி அன்று ஒரு பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.