கோயில் நிலம் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள சைனாவரம் கிராமத்தில் பழமையான காளத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்தன. இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து காவக்ல்துறை பாதுகாப்புடன் ஹிந்து சமய அறநிலையத் துறையின் வேலூர் இணை ஆணையர் லட்சுமணன் தலைமையிலான அதிகாரிகள், சைனாவரத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காளத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டனர். இந்த நடவடிக்கையில் ரூ. 50 கோடி மதிப்புள்ள சுமார் 14.51 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்ட அதிகாரிகள் அங்கிருந்த 12 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.