ஆசிரியர் ஹபீப் முகம்மது கைது

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் பள்ளிவாசல் இருபாலர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. அரசு உதவி பெறும் இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக முதுகுளத்துாரை சேர்ந்த ஹபீப் முகம்மது பணியாற்றுகிறார். இவர் 9, 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வந்துள்ளார். அந்த மாணவிகளிடம் அவர் கடந்த ஓராண்டிற்கு மேலாக தனித்தனியாக பாலியல் ஆசைகளை தூண்டும்விதமாக பேசியுள்ளர்.  இதனை வெளியே சொன்னால் பெயிலாக்கி விடுவதாக மிரட்டியுள்ளார். இவ்வாறு பாலியல் வன்முறையை தூண்டும் விதமாக அவர் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து ஒரு மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், முதுகுளத்தூர் காவல்துறையினர், ஹபீப் முகம்மதுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் விஷயத்தில் தீவிரம் காட்டிய தமிழக அரசும் ஊடகங்களும் இதில் எப்படி நடந்துக்கொள்ளப் போகின்றன என பொறுத்திருந்து பார்ப்போம்.