பாஜக தொண்டன் மீது கைவைத்து பாருங்கள்; அண்ணாமலை சவால்

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட காணொலியில் வரம்பை மீறி பேசியுள்ளார். செந்தில்பாலாஜி மீது, 2014ல் உருவான வழக்கு இது. பின், சுப்ரீம் கோர்ட் சென்று, இரு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்ட வழக்கு. அமலாக்கத்துறை இதற்கு முன் நடவடிக்கை எடுத்ததற்குக்கூட, தடை வாங்கி வைத்திருந்தனர். அந்தத் தடை இப்போது விலக்கப்பட்டு, செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். சகோதரி கனிமொழி கைதின்போதுகூட முதல்வர் இப்படி கோபப்படவில்லை. செந்தில்பாலாஜி கைதுக்கு கோபப்படுகிறார் என்றால், பொதுமக்கள் பேசுவது சரி தான். ‘தி.மு..,வின் கருவூலம்என்பது செந்தில் பாலாஜி தான். செந்தில் பாலாஜி கைதுக்குப்பின் முதல்வரின் நடவடிக்கை, ஒரு முதல்வர் நடந்து கொள்வதைப் போல இல்லை. அரசு நிர்வாகத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாதவர் சபரீசன் என்றபோது, அவர் எதற்காக செந்தில்பாலாஜியை பார்க்க, மருத்துவமனை சென்றார்? முதல்வரின் பேச்சு, பா.., தொண்டர்களை நேரடியாக மிரட்டுவதாக உள்ளது. நாங்கள் எதற்கும் தயாராகவே உள்ளோம். தி.மு.., குண்டர்கள் வீதிக்கு வருவது, தமிழகத்திற்கு புதிது அல்ல. இப்போது பா.., தொண்டர்களை குறி வைத்துள்ளனர்.

முதல்வருக்கு சவால் விடுகிறேன். பா.., தொண்டர்கள் மீது கைவைத்து பாருங்கள். நிலைமை கைமீறினால் கோட்டைக்கு வருவோம். நீங்கள் கொடுத்தால் திருப்பிக் கொடுப்போம். நாங்கள் பழைய பா.., அல்ல. ஊழல் செய்யும் அமைச்சர் மீது கோபம் காட்டாமல், பா.., தொண்டர்கள் மீது கோபத்தை காட்டுவது என்ன நியாயம்? டி.ஆர்.பாலு என் மீது தொடர்ந்த அவதுாறு வழக்கில், உரிய ஆவணத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளேன். இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்தால், பா..,வுக்கு லாபம் தான். எனவே, எதிர்க்கட்சிகள் இணைவதை பார்த்து, பா.., பயப்படவில்லை. எதிர்க்கட்சிகள் இணைவது நடக்கவே நடக்காது. சென்னை மெட்ரோ ரயில் வழக்கை, சி.பி.., விசாரித்தால், முதல்வர் ஸ்டாலின் சிறை செல்வது உறுதி. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.