கோயில் பூசாரிகள் பேரவை ஆதரவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.கவுக்கு மக்கள் ஆதரவுடன் பல்வேறு அமைப்புகள் ஆதரவுகளும் குவிய தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ‘கோயில் பூசாரிகள் பேரவை’ அமைப்பு, பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் நடந்த கோயில் பூசாரிகள் பேரவையின் மாநில பொதுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோயில் பூஜை பொருள்களுக்கு வரி விலக்கு, அமர்நாத் மற்றும் கயிலாய யாத்திரை செல்ல மானியம், பூஜை செய்யும் கோயிலுக்கு அருகே இருக்கும் இடத்தில் பூசாரிகளுக்கு இலவச வீடு, மாதாந்திர உதவித்தொகை, பூசாரிகள் நல வாரியத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதால் பூசாரிகள் அனைவரும் பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.